Wednesday, February 24, 2010

டைம் சேஞ்சர் - கிறிஸ்டியனின் கண்ணோட்டம்




வேதத்தை ஆதாரமாக வைக்காமல் செயல்படும் நீதிகள் எல்லாம் கால போக்கில் மாறிவிடும் ஆபாயத்தை உணர்த்துகிறது இப்படம் . இந்த படத்தை பற்றி நான் யோசிக்கையில் சிறு குழந்தைகளை எப்படி தேவவார்த்தையின் அடிப்படையில் வளர்க்க வேண்டும் என்று என்னுடைய சபையில் சொல்லி கொடுத்தது ஞாபகம் வருகிறது.அதாவது அவைகள் செய்யும் தவறுகளை நாம் வெறுமனே சுட்டி காட்டாமல் அத்தவறுகளை ஏன் செயகூடாது என்றும் சொல்லவேண்டும் என்று போத்திக்கபட்டேன். உதாரணத்திற்கு பொய் சொல்லும் போது அதை ஏன் தவறு என்று பத்து கட்டளைகள் மூலம் சுட்டி காட்டவேண்டும். இல்லை என்றால் இன்று அமெரிக்காவில் உள்ள மக்களை போன்று உனக்கு எது சரி என்று தெரிகிறதோ அதை செய் என்ற கோட்பாடு சீக்கிரமே வந்துவிடும்.
ஒரு காலத்தில் திருமணம் செய்வதற்கு முன் ஆண் பெண் பழக கூடாது என்ற சொல்லபடாத சட்டம் நாம் இருதயத்தில் சமயங்களின் முலமாக இருந்தது. அதுவும் சமுதாயத்தின் அழுத்ததினால் காதல் செய்வது மிகவும் தவறாக கருதபட்டது. ஆனால் இப்போது அது ஒரு தவறில்லை என்ற அளவுக்கு போய்விட்டது.நான் காதல் திருமணத்திற்கு எதிர்ரனாவன் இல்லை.ஆனால் அதை தேவ வார்த்தை அங்கிகரிக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லை என்றால் நாளடைவில் ஒருவர் பல பேரை காதல் செய்யும் நிலைக்கு சென்று வேரங்கோ சென்று விடும்.
சக கிருஸ்துவர்களே நம் முன்னோடிகள் நமக்கு கொடுக்கபட்ட விளக்கின் ஒளியை நம் பின்வரும் சந்ததிக்கு கொடுக்க கடமை பட்டவர்களாக உள்ளோம்.
கிறிஸ்டியன்

Monday, February 22, 2010

TIME CHANGER - டைம் சேஞ்சர்


இது ஒரு கிறிஸ்டியன் சினிமா



படம் நல்ல விறுவிறுப்போடு எடுத்திருகிறாக்கள் . பத்தொன்பதாம் நூற்றான்டில் ஒரு பைபிள் டீச்சர் ஒரு கிறிஸ்துவ காலேஜ் இடமிருந்து தன்னுடைய புதிய புத்தகத்தின் அங்கீகாரத்திற்காக அந்த கல்லூரியின் போர்டு மெம்பெர்சிடம் தன்னுடைய படைப்பை சமர்பிக்கிறார். ஆனால் அதில் ஒரு மெம்பர் விரிவுரையாளரின் புத்தகத்தை அங்கீகரிக்கவில்லை.மாறாக அந்த விரிவுரையாளரை இருபத்தி ஒன்றாம் நூறாண்டிற்கு தன்னுடைய டைம் மெஷின் மூலம் அனுப்பி இது போன்ற புத்தங்களினால் ஏற்படும் விளைவுகளை பார்க்க சொல்கிறார்.
கிறிஸ்டியன்

Sunday, February 14, 2010

வரவேற்புரை


உங்கள் அனைவருக்கும் கர்த்தரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தில் வாழ்த்துகள்.நான் அனுபவத்தில் அறிந்ததும் அறிய வேண்டும் என்றுநினைகிறவைகளையும் இங்கு உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.மற்றபடி நான் எல்லாம் அறிந்தவன் என்று எண்ணவில்லை.மேலும் நீங்கள் நான் செய்யும் தவறுகளை சுட்டி காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்.
கர்த்தர் தாமே நம்மை ஆசிர்வதிபராக. ஆமென்.
கிறிஸ்டியன்




The Kingdom of Heaven suffereth violence

The Kingdom of Heaven suffereth violence

Followers

About Me

i accepted LordJesusChrist as my saviour and God when i was 16yrs old.